குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. அமைப்பின் 31ஆம் ஆண்டு

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. அமைப்பின் 31ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்த பேரவைக் கூட்டத்துக்கு தி.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் எம்.மலைராஜன், பொருளாளர் எம்.முருகேச பாண்டியன், துணைச் செயலாளர் எம்.மலர்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சி.ஐ.டி.யூ.அமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
 இக்கூட்டத்தில் சங்கத்தின் 
உதவிப் பொதுச் செயலாளார் எம்.ஆத்மநாதன், நிர்வாகிகள் வி.அழகுமலை, எஸ்.ஏ.சந்தானம், ஆர்.குருவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் எஸ்.பாண்டியன், தி.அழுகுராஜா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். 
குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யூ. மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.பாலகுமார் நிறைவுரையாற்றினார். எஸ்.நீதிராஜன் நன்றி கூறினார்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிதிப் பயன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்க வேண்டும், வாரியத்தில் பணியாற்றும் பராமரிப்பு உதவியாளர்களுக்கு தர ஊதியத்தை மாற்றி அமைத்து 7 ஆவது ஊதியக்குழு சம்பளத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com