ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் அமைந்துள்ள ஆதிரெத்தினேசுவரர் கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி கோயில் 30 ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம் மற்றும் பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடர்ந்து புனிதநீர்க் குடங்களிலிருந்த நீரை சிவாச்சாரியார்கள் கோயில் கோபுரத்தில் ஊற்றினர். பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.
விழாவில் ஆயிர வைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன், துணைத் தலைவர் எஸ்.என்.மனோகரன், அபிஷேக விழாக் குழுவின் தலைவர் பா.புருசோத்தமன், செயலாளர் எஸ்.ஆர்.சரவணன் மற்றும் நிர்வாகி ம.கு.அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.