தொண்டியில் சூதாடிய 5 பேர் கைது

திருவாடானை அருகே தொண்டியில் சூதாடிய 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


திருவாடானை அருகே தொண்டியில் சூதாடிய 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்று போலீஸார் சோதனையிட்டனர். அப்போது பணம் வைத்த சூதாடிய தொண்டியைச் சேர்ந்த ஆஸ்கர் (40), அதே ஊரை சேர்ந்த முகம்மது சலீம் (40), மணக்குடியைச் சேர்ந்த இளையராஜா (31), தொண்டியைச் சேர்ந்த சவுக்கத் அலி (40), அதே ஊரைச் சேர்ந்த சேக்அலாவுதீன் (54) ஆகிய 5 பேரை தொண்டி போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com