பள்ளியில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு சிறப்பு முகாம்

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட இயக்க விழிப்புணர்வு சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட இயக்க விழிப்புணர்வு சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் கே.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முகாமில் கள உதவி அலுவலர் மு.ஜெயகணபதி, ஆசிரியர் சி.சரவணன், ஆசிரியை ஏ.விஜயலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பின் தூய்மை இந்தியா திட்ட இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு  பதில் அளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com