ராமநாதபுரம்

திருப்புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகாசலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜை, காப்புக்கட்டுதல் ஆகியவற்றுடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பாபுசாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். புதன்கிழமை அதிகாலையில் கோ பூஜை, யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி தீபாராதனை ஆகியன நடந்து முடிந்த பின் புனித நீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்தன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோபுரத்தில் புனிதநீரை ஊற்ற கும்பாபிஷேகம்  நடைபெற்றது. பின்னர் மூலவரான புல்லாணி மாரியம்மனுக்கும், உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மூலவர் புல்லாணி மாரியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை திருப்புல்லாணி வடக்குத்தெரு, மேலத்தெரு, ஜெகன்நகர் பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். திருப்புல்லாணி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT