பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆர்.சங்கர்  புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆர்.சங்கர்  புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 1997 -இல் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக பணியாற்றினார். பின்பு சார்பு ஆய்வாளராக 2004- 2005 ஆம் ஆண்டில் இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற இவர் பார்த்திபனூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் பணி செய்து 2016-இல் துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
துணை காவல் கண்காணிப்பாளராக அம்பாசமுத்திரம், மானாமதுரை, விருதுநகரில் பணியாற்றி வந்த இவர் தற்போது 3-ஆவது முறையாக பரமக்குடி உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com