மதிமுக நிர்வாகிகள் கூட்டம்

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எஸ். முத்தையா (அமமுக) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்நோக்கும் விதமாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் கே.ஏ.எம். குணா தலைமையில், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.     இதில், இத்தொகுதியில் உள்ள 302 வாக்குச் சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனை  நடத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் எம். பசீர்அகமது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் என். பிரகாசம், பி. ராஜ்குமார், நகர் பொறுப்பாளர் பழ. சரவணன், பொறியாளர் இ. நாகராஜன், ஒன்றியச் செயலர் ஏ. ராமலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com