ராமேசுவரம் விடுதியில் தாய்,மகள்,பேரன் தற்கொலை முயற்சி

ராமேசுவரம் தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை சென்னையைச் சேர்ந்த தாய், மகள், பேரன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

ராமேசுவரம் தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை சென்னையைச் சேர்ந்த தாய், மகள், பேரன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
       ராமேசுவரத்தில் வர்த்தன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் சென்னை குளத்தூர் தென்பழனி பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள், 2 வயது சிறுவன் என 3 பேர் செவ்வாய்க்கிழமை காலையில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள் தங்களை தாய்,மகள் மற்றும் பேரன் என அறிமுகம் செய்துள்ளனர். முத்துமாரி என்ற பெயரில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 8 மணிக்கு விடுதி ஊழியர் உணவுக்காக அறையின் கதவை தட்டி உள்ளார். அறையை அவர்கள் திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த கோயில் காவல் சார்பு- ஆய்வாளர் வேலம்மாள் தலைமையில் வந்த காவல்துறையினர்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 
  அப்போது அங்கு மூன்று பேரும் விஷம் அருந்தி மயக்க நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் அருகிலுள்ளமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருப்பதால் அவர்களது முழு விவரம் தெரியவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக மூவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ளனரா என கோயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com