தொண்டி அருகே உள்ள மோர்பண்ணையைச் சேர்ந்தவர் வீரசிங்கம் (45). இவர் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் தளிர்மருங்கூர் கிராமத்திற்குச் சென்றுவிட்டு, தொண்டி நோக்கி சென்றபோது நிலைதடுமாறி கிழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வீரசிங்கம் மகள் மகாலெட்சுமி அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.