முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி துறை சார்பில், ஊட்டச் சத்து வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், புதுவாழ்வுத் திட்டம் மற்றும் அனைத்து மகளிர் மன்றம் சார்பில், தாய்ப்பால் அவசியம் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு, முதுகுளத்தூர் ஆணையர் கணேஷ்பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி முன்னிலை வகித்தார். பேரணியானது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி காவல் நிலையம், வடக்கூர், அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில், தாய்ப்பால், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.