திருவாடானை அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் மண் அள்ளியதாக ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடியைச் சேர்ந்தவர் இளங்கோ (54). இவருக்கு சொந்தமான இடத்தில் எத்தியதிடலைச் சேர்ந்த தோமையார் (38) என்பவர் அனுமதியின்றி மண் எடுத்துள்ளார்.
இது குறித்து இளங்கோ அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை அங்கு சென்று டிராக்டரை பறிமுதல் செய்து, தோமையாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.