ராமநாதபுரம்

கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி

DIN

முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தூய்மை  இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 
பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்ரி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைககளுடன் கல்லூரியில் தொடங்கி செல்வநாயகபுரம் ஆற்றுபாலம் வரை மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். பேரணியில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்திரன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆனந்தக்குமார், கருப்பையா, முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியின் முடிவில் மாணவிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது வீடு, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT