வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு

திருவாடானை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்மநபர்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனர்.

திருவாடானை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்மநபர்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
தொண்டி புதுக்குடியை சேர்ந்தவர் தவம்  மனைவி  இலங்கேஸ்வரி(28). இவர் புதன்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, வியாழக்கிழமை காலையில் வந்து, பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்  இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து இலங்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com