உச்சிப்புளியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தர்வேஸ், சேதுபாலசிங்கம், செளந்தரவள்ளி மற்றும் ராமநாதபுரம் தஞ்சி சுரேஷ், ஜெயஜோதி, ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில், அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், மண்டபம் ஒன்றிய பகுதிக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை வாக்காளர்களிடம் தெரிவிக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை உடனே செய்து கொடுக்க கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார்.
 முடிவில், உச்சிப்புளி வார்டு செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com