திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் தொண்டி சிவன் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
நம்புதாளை நம்புகேஸ்வரர் கோயில், ஆர்.எஸ்.மங்கலம் சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரினம் செய்தனர்.
மானாமதுரையில்: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சோமநாதர் சுவாமிக்கு தெய்வசிகாமணிப் பட்டர் சிறப்பு பூஜை நடத்தினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சோமநாதர் சுவாமியையும் வழிபட்டனர்.