பரமக்குடி பள்ளியில் கலையருவிப் போட்டி    

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலையருவிப் போட்டிகள்

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலையருவிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இப்போட்டியில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 
 இதில் இப்பள்ளியின் மாணவ,மாணவிகளான எம்.டி.வைஷ்ணவி (கதை சொல்லுதல்),  ஜி.சபிதா (மெல்லிசை), எஸ்.மெளசுக் ரகுமான், எம். காயத்ரி (பேச்சு), கே.பூஜா (கட்டுரை),  பி.விஷ்ணுபிரியன் (கதை எழுதுதல்), எம்.கோகிலா (ஆங்கில கட்டுரை) போட்டிகளில் முதலிடம் பிடித்து மாவட்ட போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர். தேர்வு பெற்ற மாணவர்கள் பிப்ரவரி 23-ஆம் தேதி ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள மாவட்ட போட்டிகளில் பங்குபெற உள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும், வழிகாட்டிய ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் எம்.சாதிக்அலி, தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டி கெளரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com