ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தட்டச்சு தேர்வில் 3000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு இளநிலை, முதுநிலை என இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி, பரமக்குடியில் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற்றது. முதல் நாளான சனிக்கிழமை 3000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அரசு தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்கும் போது சிறப்புத் தகுதி மதிப்பெண்கள் சலுகையாக கிடைக்கும் என ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பயிலக சங்க செயலர் சரவணபவா தெரிவித்தார்.