உச்சிப்புளியில் 469 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 469 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் என்.மணிகண்டன் சனிக்கிழமை வழங்கினார்.
உச்சிப்புளியில் சமூகநலத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பாக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் எம்.மணிகண்டன் 469 பயனாளிகளுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான தலா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை வழங்கினார்.
மேலும் மீன்வளத்துறை சார்பில் 82 மீனவர்களுக்கு ரூ.19.06 லட்சம் அரசு மானியத்தில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிப்பேசினார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் மற்றும் மண்டபம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தனி அதிகாரி பா.ராஜா மற்றும் சித்ரா, மீன் வளத்துறை உதவி இயக்குநர்கள் யுவராஜ், கோபிநாத் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.