இயந்திரங்களை திருடியவர் கைது

பரமக்குடியில் டைல்ஸ் பதிக்கும் இயந்திரங்களை திருடியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

பரமக்குடியில் டைல்ஸ் பதிக்கும் இயந்திரங்களை திருடியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
பரமக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் முருகேசன் (31). இவர் கட்டுமானப் பணிகளில் மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார்.
இப்பணிகளுக்கு பயன்படுத்தும் சுவர் உடைக்கும் இயந்திரம், துளையிடும் இயந்திரம், மார்பிள் கட்டிங் இயந்திரங்களை வேலை செய்யும் இடத்தில் வைத்திருந்தார். ரூ 20 ஆயிரம் மதிப்பிலான இந்த உபகரணங்களை பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராசு மகன் பிரகாஷ் (39) திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com