பரமக்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமக்குடி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரா.பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் ஜனவரி 24-ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினார்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.