தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே. ஜீவா தலைமை வகித்தார். இதில், ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வறட்சியைச் சந்தித்து வருகிறது.
எனவே, இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு தொகையை முழுமையாக வழங்கவேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.