விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே. ஜீவா தலைமை வகித்தார். இதில், ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வறட்சியைச் சந்தித்து வருகிறது. 
எனவே, இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு தொகையை முழுமையாக வழங்கவேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com