தொண்டி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு

திருவாடானை அருகே  பாண்டுகுடியில் படுக்கையில் தீப்பிடித்து காயமடைந்த இளைஞர்  சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 

திருவாடானை அருகே  பாண்டுகுடியில் படுக்கையில் தீப்பிடித்து காயமடைந்த இளைஞர்  சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 
       பாண்டுகுடியைச் சேர்ந்தவர் குமார் (35). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர், மது போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்ததால், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
     இந்நிலையில், குமார் கடந்த சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டில் படுத்திருந்தபோது, பீடியை குடித்துவிட்டு அணைக்காமல் தூங்கிவிட்டாராம். இதனால், படுக்கையில் தீப்பிடித்து பரவி குமாரின் உடலில் பற்றியது. அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருவாடனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி குமார் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 
     இது குறித்து இவரது சகோதரி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com