திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருவாடானை அருகே அருனூற்றி மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் பிரசன்னா (31). இவர் செவ்வாய்க்கிழமை இரவு திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து காவல் நிலையத்தை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது பணியில் இருந்து காவல் ஆய்வாளர் நர்மதா இதுகுறித்து கேட்ட போது, அவரை பிரசன்னா தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து காவல் துறை ஆய்வாளர் நர்மதா புகாரின் பேரில் பிரசன்னாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.