திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கருப்பண சுவாமி கோயில் விழாவில் அரசு அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை அருகே திணையத்தூர் கருப்பண சுவாமி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(28) மற்றும் கீழ்க்குடியை சேர்ந்த மதியழகன்(42) ஆகியோர் விளம்பர பதாகை வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஹெர்ஜோன் தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, மதியழகன் மீது தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.