சிவகங்கை

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

DIN

கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை சிவகங்கை தாலுகா போலீஸார் குண்டர் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
சிவகங்கை அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்த காளையப்பன் மகன் ராஜசேகர் (29). இவர் மீது சிவகங்கை தாலுகா, சாக்கோட்டை, காளையார்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.    இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ராஜசேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் ராஜசேகரை செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT