சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் வழக்குரைஞர்களுக்கு சமரச தீர்வு காண்பது எவ்வாறு என்பது குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) வி.வி.தனியரசு தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலரும், சார்பு நீதிபதியுமான டி.பி.வடிவேலு, சிவகங்கை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் உறுப்பினர் எம்.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் எஸ்.அருணாசலம், டி.சாய்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குரைஞர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணையின்றி பேச்சுவார்த்தை மூலம் சமரசமாக தீர்வு காண்பது குறித்து பயிற்சி வழங்கினர். முகாமில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.