மானாமதுரை ஒன்றியம் சித்தலக்குண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு அதன் முதல்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சுந்தர்ராசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஆறுமுகம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் முருகேசன், கட்சி கிளைச் செயலர் பாலு உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.விவசாயிகள் சங்கத்தின் சித்தலக்குண்டு கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர்- சுப்பிரமணியன், உதவித் தலைவர்- சுந்தர்ராசு, செயலர்- பி.சங்கு, உதவிச் செயலர்- வி.சங்கு, பொருளாளர்- பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் சித்தலக்குண்டு பகுதியில் விவசாயப் பணிக்கு வேளாண்மைத்துறை சார்பில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்துதர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.