தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில்  மரங்களை அகற்றக் கோரிக்கை

தேவகோட்டை-திருப்பத்தூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள

தேவகோட்டை-திருப்பத்தூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல் முள்ளிக்குண்டு வரையுள்ள சாலையில் இருபுறமும் மரங்கள் அதிகமாக உள்ளன.  இம்மரங்களில் பல தூர்ந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே  கீழே விழுந்து கிடக்கும் மரங்களை இன்னும்  அகற்றவில்லை. 
இதனால் வாகனங்களில் செல்வோரும்  பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடனே  செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையினர் தலையிட்டு மரங்களை அப்புறபடுத்துமாறு அப்பகுதி மக்களும்  வாகனங்களில் செல்வோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com