மழை, வெள்ளத்தின் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக் கழக பதிவாளர் ஹா.குருமல்லேஷ் பிரபு தெரிவித்திருப்பதாவது: கஜா புயலின் தாக்கம் சீரடையாத நிலையில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.