மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
மானாமதுரை ஆர்.சி தெரு பகுதியில் பிள்ளைமார் சமூகத்தினர் உள்பட பலர் வ.உ.சி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வாகனங்களில் நெல்லைக்குச் சென்று வ.உ.சி. நினைவு மணிமண்டத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மானாமதுரை அருகேயுள்ள கால்பிரிவு, திருப்பாச்சேத்தி, இடைக்காட்டூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வ.உ.சி. குருபூஜை விழா கொண்டாடப்பட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.