சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் மு. சின்னையன் திங்கள்கிழமை தெரிவித்தார்.