சிவகங்கை ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு

சிவகங்கை ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தார்.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தார்.
சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (24). கட்டடத் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே  சென்றாராம். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் திங்கள்கிழமை காலை பிரதீப் உடல்கள் துண்டான நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலின்பேரில், மானாமதுரை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்த இளைஞர் குறித்து விசாரணை நடத்தினர். 
முன்னதாக, சிவகங்கை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வர தாமதமானதால், பிரதீப் உடல் ரயில் தண்டவாளத்தை விட்டு அகற்றப்படாமல் இருந்தது. இதனால், மானாமதுரையிலிருந்து  திருச்சி சென்ற பயணிகள் ரயில் பிரதீப் உடல் மீது ஏறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com