தமிழக அரசைக் கண்டித்து சிவகங்கையில் திமுக ஆர்ப்பாட்டம்

திமுக சார்பில், தமிழக அரசைக் கண்டித்து சிவகங்கையில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திமுக சார்பில், தமிழக அரசைக் கண்டித்து சிவகங்கையில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
     சிவகங்கை அரண்மனை வாசல் முன் உள்ள சண்முகராஜா கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக சிவகங்கை மாவட்டச் செயலருமான கே.ஆர். பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.    இதில், தமிழக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடட்டுள்ள அமைச்சர்களைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.     ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை நகரச் செயலர் சி.எம். துரைஆனந்த், மாவட்டத் துணைச் செயலர்கள் த. சேங்கைமாறன், மணிமுத்து, சோங்கு சோ, தெற்கு ஒன்றியச் செயலர் எம். ஜெயராமன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆதி.அழகர்சாமி மற்றும் நகர் இளைஞர் அணி அமைப்பாளர் அயூப்கான் உள்பட மாவட்ட மாணவர் அணியினர், மீனவர் அணியினர், இளைஞர் அணியினர், அனைத்து ஒன்றியச் செயலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com