காரைக்குடியில் செப். 24-இல் கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

சிவகங்கை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வரும் திங்கள்கிழமை (செப். 24) பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெறுகின்றன.
 இதுகுறித்து காரைக்குடியில் உள்ள சிவகங்கைமாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் செப். 27 ஆம் தேதி அன்று உலக சுற்றுலா தினம் கொண்டா டப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே "சுற்றுலாவின் எண்ப பரிமாண வளர்ச்சி' என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட் டிகளை நடத்துகின்றன. இப்போட்டிகள் திங்கள்கிழமை (செப். 24) மதியம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும். இதில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வரும் செப். 27- ஆம் தேதி நடைபெ றும் சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com