சிவகங்கை

பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலி பறிப்பு

DIN

காரைக்குடி அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கொத்தரியைச் சேர்ந்தவர் டி.எஸ். துரைராஜ். இவரது மனைவி வசந்தாள் (62). இவர்கள் இருசக்கர வாகனத்தில் குன்றக்குடி கோயிலுக்கு சென்றுவிட்டு, கடந்த புதன்கிழமை மாலை ஊர் திரும்பினர்.
 அப்போது கொத்தரி சோலையாண்டவர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், வழிமறித்து, வசந்தாள் அணிந்திருந்த ஏழரைப் பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம். அப்போது, வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். 
    இதுகுறித்து பள்ளத்தூர் காவல்நிலையத்தில் வசந்தாள் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT