சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தேவகோட்டை, மங்களம், உஞ்சனை, ஆறாவயல், வேப்பங்குளம், காரை, பவனக்கோட்டை, புளியால் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.