சிவகங்கை
மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஸ்ரீசோமசுந்தரர் செளந்தர நாயகி அம்மன், குன்னமாகாளியம்மன் தேர்த் திருவிழாவை மு
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஸ்ரீசோமசுந்தரர் செளந்தர நாயகி அம்மன், குன்னமாகாளியம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இப்பந்தயத்தில், பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன. போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.