மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் துணைத் தலைவர் சுந்தரி காத்தமுத்து முகாமை தொடக்கி வைத்தார். இதில் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். சென்னை டி.வி.எஸ். லாஜிஸ்டிக் நிறுவனத்தினர் முகாமில் பங்கேற்று எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் 40 மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்தனர். இவர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி முதல்வர் ஆர்.அசோகன், தனி அலுவலர் சி.ஆர்.ஏ.பி.மாரி, துணைத் தலைவர் எஸ்.ராஜாசங்கர், மேலாளர் கே.சோமசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.