சிவகங்கை

மானாமதுரை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் துணைத் தலைவர் சுந்தரி காத்தமுத்து முகாமை தொடக்கி வைத்தார். இதில் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். சென்னை டி.வி.எஸ். லாஜிஸ்டிக் நிறுவனத்தினர் முகாமில் பங்கேற்று எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் 40 மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்தனர். இவர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.  இதில் கல்லூரி முதல்வர் ஆர்.அசோகன், தனி அலுவலர் சி.ஆர்.ஏ.பி.மாரி, துணைத் தலைவர் எஸ்.ராஜாசங்கர், மேலாளர் கே.சோமசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT