மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை கொடியேற்று விழா கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நகரில் அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், சிப்காட், கன்னார்தெரு உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ தங்கமணி, அக் கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், நாகராஜன், சங்கையா மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய பகுதிகளிலும் அக் கட்சி சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.