மானாமதுரையில் புதன்கிழமை இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தில் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மானாமதுரை உடைகுளம் பகுதியில் வசிப்பவர் மண்பாண்டத் தொழிலாளி முனியசாமி. இவர் அண்ணாசிலை அருகே வைகையாற்றை ஒட்டியுள்ள செங்கல் காளவாசல் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியைக் காட்டி முனியசாமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இச் சம்பவத்தைப் பார்த்த தீத்தான்பேட்டையைச் சேர்ந்த செல்வம் , வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். இதில் 4 பேரும் சேர்ந்து முனியசாமி, செல்வம் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர்.
காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.