சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கால்வாய்க்குள் தவறி விழுந்த பாய் வியாபாரி உயிரிழந்தார்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு அருகேயுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய் உள்ளது. இதில் 50 வயது மதிக்கத்தக்கவர் கீழே விழுந்து இறந்து கிடந்தார். போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் திருப்பத்தூர் அருகே கருமிச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் திருப்பதி என்பதும், இவர் பாய் வியாபாரி என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து இளையான்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.