திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேர்தல் குறித்த விளக்க விரிவுரையாளர் வட்டாட்சியர் கந்தசாமி பயிற்சியளித்தார். இப்பயிற்சியில் வட்டாட்சியர்கள் பஞ்சவர்ணம், தங்கமணி, எம்.சுப்பிரமணியன், தனலட்சுமி, முருகேஸ்வரி உள்ளிட்ட 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.