தேர்தல் பணியில்  ஈடுபடும் அலுவலர்கள் பட்டியலை சமர்பிக்க உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான அலுவலர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான அலுவலர்கள் விபரப் பட்டியலை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியது: மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரப் பட்டியலை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
மாவட்டத்தில் அரசுத் துறைகள் வாரியாகவும், பள்ளிக் கல்வித் துறை மூலமும் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் விவரப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை ஒருங்கிணைத்து ஓரிரு நாட்களுக்குள் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com