தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.20 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், சமையல் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள், முகவர்கள் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில் பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம், சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.