தேனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன் மகன் மனோஜ்ராம் (26). இவர், பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தார்.இதனிடையே பழனிசெட்டிபட்டியில் தேனி- கம்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனோஜ்ராம் மீது, அதே திசையில் இருந்து வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், மனோஜ்குமார் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் (24) விசாரித்து வருகின்றனர்.