ஒட்டன்சத்திரம் பகுதியில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பரிதவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி,புலியூர்நத்தம், கேதையுறும்பு, முத்துநாயக்கன்பட்டி, காவேரியம்மாபட்டி, ஜவ்வாதுப்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் கஜா புயல் பாதிப்பால் இன்னும் மின் விநியோகம் கிடைக்கவில்லை.
இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரின்றியும், செல்லிடப்பேசிகளுக்கு சார்ஜ் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அச்சத்துடனும், தூக்கமின்றியும் உள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் மெழுகுவர்த்தி விற்று தீர்ந்து விட்டதால் மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்சார வாரியத்தினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com