உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் வரும் செப்.30-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, செவிலியர் பயிற்சி படிப்பு, தையல் பயிற்சி மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.