ஆண்டிபட்டியில் காமராஜர் பல்கலை. கல்லூரியில் என்.எஸ்.எஸ். சார்பில் இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காமராஜர் பல்கலை. கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள் அறிமுகவுரையாற்றினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி, கணினி பயன்பாட்டியல் துறை திட்ட அலுவலர் மகாலட்சுமி, பொருளாதாரத் துறை திட்ட அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாலியல் வன்முறை, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், அரசின் கல்வி கொள்கை மாற்றம் ஆகிய தலைப்புகளில் நாடாளுமன்ற விவாதம் நடந்தது. இதில் மாதிரி இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தேனி மேரிமாதா கல்லூரி, நாடார் சரசுவதி கல்லூரி, காமராஜர் பல்கலை. கோட்டூர், ஆண்டிபட்டி உறுப்புக் கல்லூரிகள், வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.