தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு, பெரியகுளம் பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்.23) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
தேனி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பி.சி.சிதம்பர சூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் நடத்தும் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பெரியகுளம் , தென்கரை, கச்சேரி ரோடு பிஎஸ்டி நினைவு விளையாட்டங்கில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 2005 ஜனவரி 1 ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் இஎம்எஸ் எண்ணுடன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.