டம் டம் பாறை பகுதியில் கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலத்தவர்

பெரியகுளம் அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் டம் டம் பாறை பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் குறித்த அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.

பெரியகுளம் அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் டம் டம் பாறை பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் குறித்த அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.
       சில நாள்களுக்கு முன் டம் டம் பாறை பகுதியில் வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் இறந்து கிடந்தார். 
இவரை, யாரோ கொலை செய்து வனப் பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, தேவதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
     இந் நிலையில், கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த முகமது அமீர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதை, இவரது உறவினர்கள் உறுதி செய்தனர். 
     இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com